Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழப்பு

By: Karunakaran Sun, 30 Aug 2020 12:35:53 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழப்பு

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றார். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அணி வீரர்கள் உள்பட மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பி.சி.சி.ஐ. நிர்வாகம் கொரோனா பரிசோதனைகளை செய்தது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

former indian cricketer,suresh raina,uncle,death ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், சுரேஷ் ரெய்னா, மாமா, மரணம்

சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாக அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் வசித்து வந்த சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் அவரை தாக்கியதால் ரெய்னாவின் மாமா உயிரிழந்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால் கொல்லப்பட்டவர் ரெய்னாவின் மாமா என உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி (80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தற்போது இதில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|