- வீடு›
- விளையாட்டு›
- 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங்
2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங்
By: Karunakaran Wed, 05 Aug 2020 5:34:19 PM
2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ்சிங். வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததுடன் தொடர்நாயகன் விருதையும் பெற்றார். போட்டி முடிந்ததும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை.
அதன்பின், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த ஆண்டு (2019) கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்நிலையில், இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பிய போது விராட்கோலி எனக்கு ஆதரவு அளித்தார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி குறித்து உண்மையான நிலைமையை டோனி எனக்கு உணர்த்தினார் என யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
38 வயதான யுவராஜ்சிங் பேட்டி அளித்தபோது, 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார். ஒரு கேப்டனாக சில நேரங்களில் உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இறுதியில் ஒரு அணியாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தடுமாறிய போது டோனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதே போல் லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவாக இருந்து இருக்கிறார். புற்றுநோயில் இருந்து மீண்டு களம் திரும்பிய போது என் மீது நம்பிக்கை வைக்காததற்காக நான் யாரையும் குறை சொல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.