- வீடு›
- விளையாட்டு›
- தேவ்டட் படிக்கல் அதிகநேரம் பேட் செய்தால் அணிக்கு பலன்; விராட்கோலி புகழாரம்
தேவ்டட் படிக்கல் அதிகநேரம் பேட் செய்தால் அணிக்கு பலன்; விராட்கோலி புகழாரம்
By: Nagaraj Sun, 04 Oct 2020 5:49:00 PM
தேவ்டட் படிக்கல் அதிக நேரம் பேட் செய்தால், அது அணிக்கு பயன் அளிக்கும் என்று புகழ்ந்து பேசியுள்ளார் விராட் கோலி.
பெங்களூரு அணி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி 72 ரன்கள் அடித்து பெங்களூரு அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இதே போட்டியில் தேவ்டட் படிக்கல் 63 ரன்கள் அடித்தார். விராட் கோலி மற்றும் தேவ்டட் படிக்கல் இருவரும் சேர்ந்து 99 ரன்கள் அடித்தனர். 4 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 174 ரன்களை அடித்து இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருக்கிறார் தேவ்டட் படிக்கல். இந்த ஐபிஎல் 2020 தொடரில் தேவ்டட் படிக்கல் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு.
இந்தப் போட்டிக்குப் பின்னர் விராட் கோலி, தேவ்டட் படிக்கல் ஒரு சிறப்புத்
திறமை வாய்ந்தவர் என்பதை தான் எவ்வாறு அறிந்தேன் என்பதை பற்றி பேசினார்.
"தேவ்டட் படிக்கல் விளையாடுவதை நான் பார்த்தேன். நான் சைமனிடம், இந்த
பையனுக்கு சில அற்புதமான திறமைகள் கிடைத்துள்ளன. அற்புதமான ஷாட்களை
அடிக்கிறார். அவர் சாதாரணமாக விளையாடுகிறார், ரிஸ்க் எடுப்பது போலவே
தெரியவில்லை என்று கூறினேன்.
தேவ்டட் படிக்கல் அதிக நேரம் பேட்
செய்ய முடிந்தால், அது அணிக்கு உதவியாக இருக்கும். அவர் ஒரு புத்திசாலி,
விளையாட்டை நன்கு புரிந்து கொள்கிறார். அவர் எவ்வளவு கற்றுக்கொள்கிறாரோ,
அந்த அளவுக்கு ஆர்சிபிக்கு பயனளிக்கும்" என்று விராட் கோலி பேசினார்.