Advertisement

இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு

By: Nagaraj Sun, 27 Dec 2020 12:14:44 PM

இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு

இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு விராட்கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்ட இந்தியா, தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

virat kohli,praise,bowlers,twitter ,விராட்கோலி, பாராட்டு, பந்து வீச்சாளர்கள், டுவிட்டர்

அறிமுகமான முகமது சிராஜ் 2-வது செசனில் அற்புதமாக பந்து வீசினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் முன்னதாகவே பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் மேத்யூ வடே, ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

இந்நிலையில், இந்தியா திரும்பியுள்ள கேப்டன் கோலி, இந்திய பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ''முதல் நாள் நமக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த காட்சி வெளியானது. திடமாக முடித்துவிட்டனர்'' என்றார்.

Tags :
|