- வீடு›
- விளையாட்டு›
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
By: Nagaraj Sun, 09 Oct 2022 06:34:16 AM
தென் ஆப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிக்கொண்ட முதலாவது ஒருநாள் போட்டி
உத்தரபிரதேச மாநிலம், லக்னோ, அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். உடலில் காயம்
ஏற்பட்டால் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை.
இதனையடுத்து,
2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள்
போட்டி அக்டோபர் 11ம் தேதி புதுடெல்லியிலும் நடக்க இருக்கிறது.