Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப் அணிக்கு எதிராக டர்னிங் பாயிண்ட் அமைத்து சூப்பர் டூப்பர் பார்முக்கு திரும்பிய வாட்சன்

பஞ்சாப் அணிக்கு எதிராக டர்னிங் பாயிண்ட் அமைத்து சூப்பர் டூப்பர் பார்முக்கு திரும்பிய வாட்சன்

By: Karunakaran Mon, 05 Oct 2020 3:04:02 PM

பஞ்சாப் அணிக்கு எதிராக டர்னிங் பாயிண்ட் அமைத்து சூப்பர் டூப்பர் பார்முக்கு திரும்பிய வாட்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் அரைகுறை மனதுடன் போட்டியை பார்த்தனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளேயில் நேர்த்தியாக பந்து வீசினாலும் விக்கெட்டை வீழ்த்த இயலவில்லை. இதனால் பஞ்சாப் அணி 6.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது,

மயங்க் அகர்வால் கே.எல். ராகுல் ஆகியோர் இருக்கும்போது ரன்கள் குவித்து விடுவார்கள் என்று நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். 8 ஓவர் முடிவில் 61 ரன்கள் என்ற நிலையில், 9-வது ஓவரை வீச வந்த பியூஸ் சாவ்லா ஒரு சூப்பர் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தார். முதல் பந்திலேயே மயங்க் அகர்வால் அவுட் ஆக்கினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு சற்று அடங்கியது. ஜடேஜா சிறப்பாக பந்து வீசி மந்தீப் சிங்கை 27 ரன்னில் வெளியேற்றினார்.

watson,super duper farm,turning point,punjab ,வாட்சன், சூப்பர் டூப்பர் ஃபார்ம், திருப்புமுனை, பஞ்சாப்

ஒருபக்கம் கேஎல் ராகுல் நிற்க அதிரடி பேட்ஸ்மேன் பூரன் களம் இங்கினார். ஷர்துல் தாகூர், முதல் பந்தில் பூரன் ஆட்டமிழக்க இரண்டாவது பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் வாட்சன் டு பிளஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் 5 ஓவர் முடிவில் 41 ரன்களை எடுத்திருந்தது. 6-வது ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து பார்மில் இருக்கும் டு பிளிஸ்சிஸ் வாட்சனுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். பின்னர் இருவரும் பஞ்சாப் அணியை பந்தாட தொடங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பத்து ஓவரில் 100 ரன் குவித்தது.

watson,super duper farm,turning point,punjab ,வாட்சன், சூப்பர் டூப்பர் ஃபார்ம், திருப்புமுனை, பஞ்சாப்

11வது ஓவரை ஜோர்டான் வீசினார் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 31 பந்தில் அரைசதம் கடந்தார் வாட்சன். ஓவரின் 5-வது பந்தில் சிங்கிள் அடித்து 33 பந்தில் அரைசதம் அடித்தார் டு பிளேசிஸ். இதனால் 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து சென்னை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்களும் டு பிளிஸ்சிஸ் 53 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்

வாட்சனை மாற்ற வேண்டும். எம்எஸ் டோனி இன்னும் வாட்சனை இன்னும் கட்டி இழுக்கிறார் என ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையாக அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வாட்சன் அணியை ஜெயிக்க வைத்துள்ளார். வாட்சன் என்ற இன்ஜின் சூடாக 4 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது. தற்போது இன்ஜின் சூடாகி ஹைவேயில் சென்றுகொண்டிருக்கிறது. இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடுத்து நிறுத்துவது மற்ற அணிகளுக்கு கடினமாக அமையும்.

Tags :
|