Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட துபாய் சென்ற வாட்சன் தனிமைப்படுத்தி கொண்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட துபாய் சென்ற வாட்சன் தனிமைப்படுத்தி கொண்டார்

By: Karunakaran Sat, 22 Aug 2020 5:22:36 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட துபாய் சென்ற வாட்சன் தனிமைப்படுத்தி கொண்டார்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் செல்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டபின், அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நெகட்டிவ் முடிவு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.

watson,dubai,chennai super kings,ipl ,வாட்சன், துபாய், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.பி.எல்

இந்நிலையில் சென்னை அணியின் ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்துள்ளார். அங்குள்ள புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து வாட்சன் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சில உடற்பயிற்சிகளை செய்ய இருக்கிறேன். அறைகளில் மேலும் கீழும் இறங்கி பயிற்சி மேற்கொண்டு சிஎஸ்கே பயிற்சிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ஐபிஎல் தொடருக்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளது மூலம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். அவரது வீடியோ பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரீ-டுவீட் செய்து, ‘வாட்சன் 7-உடன் இன்னிங்சை தொடங்குவார் என்று தெரிவித்துள்ளது.

Tags :
|
|