Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கணவர் வினோத் காம்ப்ளி தன்னை தாக்கியதாக மனைவி போலீசில் புகார்

கணவர் வினோத் காம்ப்ளி தன்னை தாக்கியதாக மனைவி போலீசில் புகார்

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:14:31 AM

கணவர் வினோத் காம்ப்ளி தன்னை தாக்கியதாக மனைவி போலீசில் புகார்

பாந்த்ரா: கணவர் வினோத்காம்ப்ளி தன்னை தாக்கினார் என்று அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் (மேற்கு) ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், காம்ப்ளி குடித்துவிட்டு போதையில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மனைவியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை அவரது 12 வயது மகன் நேரில் பார்த்தார். இதையடுத்து, சமையலறைக்குள் சென்ற காம்ப்ளி, சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரத்தின் கைப்பிடியை எடுத்து மனைவி மீது வீசினார். மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comply,cricketer,drunk,wife, ,காம்ப்ளி, குடிபோதை, மனைவி, புகார், கிரிக்கெட் வீரர்

இதைத் தொடர்ந்து, பாந்த்ரா போலீசார், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் மற்றும் அவமதிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பை பாந்த்ரா போலீசார் காம்ப்ளியின் வீட்டிற்கு சென்றனர். அவரை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று பிரிவு 41ஏ-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பினர். அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|