Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? ரசிகர்கள் கேள்வி

ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? ரசிகர்கள் கேள்வி

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:33:44 AM

ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? ரசிகர்கள் கேள்வி

ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வியினை ரசிகர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் பொருட்டு 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில் அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணிக்கு கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் இரண்டு பந்துவீச்சாளர்களும் அடங்குவர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னாவும் திடீரென போட்டியில் இருந்து விலகி சொந்தக் காரணங்களுக்காக இந்தியா திரும்பினார். இதுபோன்ற தொடர் சோகங்களால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

harbhajan singh,csk team,dubai,fans,series question ,ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணி, துபாய், ரசிகர்கள், தொடர் கேள்வி

இந்தநிலையில் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் இணைவாரா? இல்லையா? என்பது குறித்த கேள்வியானது ரசிகர்களால் முன் வைக்கப்பட்டு வருகிறது, அதற்குக் காரணம் சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ளவில்லை.

மேலும் சிஎஸ்கே அணி துபாய் புறப்பட்டு சென்றபோதும், ஹர்பஜன் சிங் அணியுடன் செல்லவில்லை. மேலும் இதுகுறித்து அவர் வாய் திறந்தபாடில்லை என்பதனால் ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வியினை ரசிகர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.

Tags :
|
|