Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? - சஞ்சீவ் சுரிவாலா பதில்

ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? - சஞ்சீவ் சுரிவாலா பதில்

By: Karunakaran Fri, 21 Aug 2020 7:32:13 PM

ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? - சஞ்சீவ் சுரிவாலா பதில்

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். கடந்த ஏழு சீசனில விராட் கோலி கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் ஆர்சிபி 5, 7, 3, 2-வது இடம், 8-வது இடம், 6-வது இடம், 8-வது இடம் பிடித்துள்ளது.

தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது. இதுகுறித்து ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா கூறுகையில், ‘விராட் கோலி இந்திய அணி கேப்டன். மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர். நாங்கள் விராட் கோலியை விரும்புகிறோம். விராட் கோலியுட் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

virat kohli,rcb,captain,sanjeev suriwala ,விராட் கோலி, ஆர்.சி.பி., கேப்டன், சஞ்சீவ் சூரிவாலா

விளைாட்டை பொறுத்த வரைக்கும் சில நேரங்களில் தோல்வியடையலாம், சில நேரம் வெற்றி பெறலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் சாதனையை மறந்துவிட முடியாது என சஞ்சீவ் சுரிவாலா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒரு சிறப்பான லெவன் அணியை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 21 வீரர்களை பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் ஆடும் லெவன் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அர்த்தமுள்ள பங்கை அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Tags :
|