Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டி20 மகளிர் உலகக் கோப்பையை வெல்வது அணி முன்னணி வீராங்கனைகள் கையில் உள்ளது; மிதாலி ராஜ் சொல்கிறார்

டி20 மகளிர் உலகக் கோப்பையை வெல்வது அணி முன்னணி வீராங்கனைகள் கையில் உள்ளது; மிதாலி ராஜ் சொல்கிறார்

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:13:56 AM

டி20 மகளிர் உலகக் கோப்பையை வெல்வது அணி முன்னணி வீராங்கனைகள் கையில் உள்ளது; மிதாலி ராஜ் சொல்கிறார்

புதுடில்லி: டி20 மகளிர் உலகக் கோப்பையை வெல்வது அணியில் உள்ள முன்னணி வீராங்கனைகளின் ஆட்டத்தை பொறுத்தே அமையும் என்று முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது.இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ், டி20 மகளிர் உலகக் கோப்பையை வெல்வது அணியில் உள்ள முன்னணி வீராங்கனைகளின் ஆட்டத்தை பொறுத்தே அமையும் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வது அந்த அணியின் முன் வரிசை வீரர்களின் கையில் உள்ளது.

icc,matches,mithali raj,t20,women,world cup , உலகக் கோப்பை, ஐசிசி, டி20, போட்டிகள், மகளிர், மிதாலி ராஜ்

ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடுகிறார். அவர் போட்டிகளை வென்று தருபவர். ஹர்மன்பிரீத் கவுரும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியினை வீழ்த்த மற்ற முன்வரிசை வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடும் ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் அந்த அணியின் பலமாக இருப்பார்கள் என கூறினார்.

இந்திய அணி பிப்ரவரி 12ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|