எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என தெரியுங்களா?
By: Nagaraj Mon, 09 Nov 2020 4:12:34 PM
எந்த உணவுப்பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலக்கட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை காண்பதே அரிது தான்.
ஏனெனில் நாம் சமைத்த பொருட்களை ப்ரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். அதே சமயம் சில பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும், அதை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.
அதேபோல் பூண்டை எப்போதுமே ப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்குகளையும் ப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை
கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள்
மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான
சூழலில் வைக்க வேண்டும்.
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள்
என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில்
வாங்கும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு
வருகிறது. எனினும் தேனை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
இதேபோல்
வாழைப் பழத்தை ப்ரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல்
கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை ப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும், அதனால் அதை
ப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.