தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 1 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 24 செங்கல்பட்டு - 571 சென்னை - 3,749 கோவை - 939 கடலூர் - 93 தர்மபுரி - 122 திண்டுக்கல் - 151 ஈரோடு - 391 கள்ளக்குறிச்சி - 58 காஞ்சிபுரம் - 262 கன்னியாகுமரி - 138 கரூர் - 183 கிருஷ்ணகிரி - 166 மதுரை - 243 நாகை - 228 நாமக்கல் - 219 நீலகிரி - 174 பெரம்பலூர் - 2 புதுக்கோட்டை - 94 ராமநாதபுரம் - 41 ராணிப்பேட்டை - 67 சேலம் - 521 சிவகங்கை - 85 தென்காசி - 99 தஞ்சாவூர் - 172 தேனி - 20 திருப்பத்தூர் - 47 திருவள்ளூர் - 503 திருவண்ணாமலை - 107 திருவாரூர் - 135 தூத்துக்குடி - 122 திருநெல்வேலி - 126 திருப்பூர் - 568 திருச்சி - 160 வேலூர் - 179 விழுப்புரம் - 131 விருதுநகர் - 88 விமானநிலைய கண்காணிப்பு - 19