சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 11,845 பேர் சிகிச்சை

சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு தற்போது மருத்துவமனையில் 11,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,91,754 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 11,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 363 ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,546 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,004
அண்ணா நகர் - 1,090
தேனாம்பேட்டை - 805
தண்டையார்பேட்டை - 581
ராயபுரம் - 627
அடையாறு- 836
திரு.வி.க. நகர்- 889
வளசரவாக்கம்- 671
அம்பத்தூர்- 711
திருவொற்றியூர்- 314
மாதவரம்- 382
ஆலந்தூர்- 631
பெருங்குடி- 399
சோழிங்கநல்லூர்- 230
மணலி - 145