சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,285 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது சற்று குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை பார்க்கிலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,90,949 ஆக உள்ளது. 12,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-