தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், நோய் தொற்றுக்கு நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 43 செங்கல்பட்டு - 885 சென்னை - 4,698 கோவை - 817 கடலூர் - 208 தர்மபுரி - 157 திண்டுக்கல் - 125 ஈரோடு - 458 கள்ளக்குறிச்சி - 98 காஞ்சிபுரம் - 489 கன்னியாகுமரி - 172 கரூர் - 270 கிருஷ்ணகிரி - 327 மதுரை - 307 நாகை - 296 நாமக்கல் - 379 நீலகிரி - 165 பெரம்பலூர் - 27 புதுக்கோட்டை - 150 ராமநாதபுரம் - 39 ராணிப்பேட்டை - 140 சேலம் - 672 சிவகங்கை - 104 தென்காசி - 66 தஞ்சாவூர் - 221 தேனி - 59 திருப்பத்தூர் - 95 திருவள்ளூர் - 711 திருவண்ணாமலை - 281 திருவாரூர் - 188 தூத்துக்குடி - 190 திருநெல்வேலி - 248 திருப்பூர் - 673 திருச்சி - 227 வேலூர் - 222 விழுப்புரம் - 176 விருதுநகர் - 78 விமானநிலைய கண்காணிப்பு - 9