162 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

ஆரவாரமாக தொடங்கி உள்ள, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டியின் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணியும், நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று முதல் போட்டியில் களம் இறங்கி உள்ளன. ஆட்டத்தை காண ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பு தவமாய் தவமிருந்தனர். போட்டி ஆரம்பம் ஆனதில் இருந்தே சென்னை அணி ஆதிக்கம் காட்டி வந்தது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு ஆட்டத்தை தொடங்கியது.

போட்டி தொடங்கியவுடன் முதல் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சென்னை அணி பந்து வீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை திணறடித்தனர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது மும்பை அணி. தொடர்ந்து சென்னை அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.