தெலுங்கானா மாநிலத்தில் செப்.18-ம் தேதி பொது விடுமுறை

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலத்தில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று பொது விடுமுறை அறிவிப்பு ...தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டு உள்ளது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிகழ்ச்சிகளை மாநிலத்தில் பாதுகாப்புடன் நடத்துவதற்காக GHMC மேயர் கட்வால் விஜயலட்சுமி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இதனை அடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுமுகமாக நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி அன்று மிலாதுன் நபி பண்டிகை வர உள்ளது. அதே தினம் விநாயகர் சதுர்த்தியின் கணேஷ் விசர்ஜனம் விழா செப்டம்பர் 28-ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.