சென்னையில் கொரோனாவுக்கு 3,749 பேர் சிகிச்சை - மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 360 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,07,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,850 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 374 பேர்
அண்ணா நகர் - 379 பேர்
தேனாம்பேட்டை - 353 பேர்
தண்டையார்பேட்டை - 206 பேர்
ராயபுரம் - 229 பேர்
அடையாறு- 416 பேர்
திரு.வி.க. நகர்- 366 பேர்
வளசரவாக்கம்- 318 பேர்
அம்பத்தூர்- 306 பேர்
திருவொற்றியூர்- 88 பேர்
மாதவரம்- 191 பேர்
ஆலந்தூர்- 157 பேர்
பெருங்குடி- 170 பேர்
சோழிங்கநல்லூர் - 90 பேர்
மணலி - 57 பேர்