கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 498 பேர் பாதிப்பு

498 பேர் கொரோனாவால் பாதிப்பு... கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 நேரத்தில் 498 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 3பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 923பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 135பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஐந்தாயிரத்து 738பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 15ஆயிராயிரத்து 50பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 52பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.