அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 7ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை

வாஷிங்டன்: தமிழகத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோவில் முருகன் சிலை அமெரிக்காவில் உள்ள வீட்டு மனை பாதுகாப்பு பிரிவினரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தடயம் இதழில் வந்த முருகன் சிலை தொடர்பான புகைப்படத்தை வைத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா – அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முருகன் சிலையை தமிழகம் கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.