ஜெர்மனியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் ரத்தநாளம் வெடித்து பலி

ஜெர்மன்: ரத்தநாளம் வெடித்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டர் 30 வயதில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டர், முப்பதே வயதில் ரத்த நாள வெடிப்பால் அகால மரணமடைந்தார்.

பாடி பில்டிங் வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதன்மூலம் உலகளவில் பிரபலமான ஜோ லிண்டர், கட்டுடல் அடைவதற்காக ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

3 நாட்களுக்கு முன் கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டபோது அதனை பொருட்படுத்தாமல் இருந்த லிண்டர், அன்யூரிசம் என்றழைக்கப்படும் ரத்த நாள வெடிப்பால் உயிரிழந்ததாக அவரது பெண் தோழி தெரிவித்துள்ளார்.