ஆன்லைனில் ஆதார் இலவச அப்டேட் நெருங்குகிறது கெடு தேதி

சென்னை: செப்.14 வரை மட்டுமே ஆன்லைனில் ஆதார் அப்டேட் இலவசம் ... 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில்,

ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆஃப்லைன் வழியே ஆதார் மையங்களிலில் இந்த சேவைக்கு தகுந்த கட்டணம் செலுத்த வேண்டும்.


இதையடுத்து அதன்படி கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதனை மேலும் 3 காலம் செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புகைப்படம், கருவிழி மற்றும் பயோ மெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை மக்கள் ‘மை ஆதார்’ எனும் தளத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.