தமிழக பாஜ தலைவருடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா

சென்னை: அமித்ஷா ஆலோசனை... நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து, மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பூத் கமிட்டியை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், வரும் காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியினர் பணியாற்றிட வேண்டும் எனவும் அமித்ஷா அறிவுறுத்தல்களை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை இப்போதே பாஜ ஆரம்பித்து விட்டது. அதனால்தான் அமித்ஷா ஆலோசனை நடத்தி முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.