சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் வேண்டுகோள்

புதுடில்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையல் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து கலைந்து செல்லுங்கள் என்று மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷணை பாலியல் புகாரில் கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் கைது செய்யப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்தனர்

இந்நிலையில் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்தார்.