தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் ..தகவல் அறியும் உரிமை சட்டம் ..

தமிழ்நாடு: தகவல் அறியும் உரிமை சட்டம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பால் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறியதாகவும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய நிலையும் தமிழகத்தில் உள்ளதாகவும் அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணிகளாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வரக்கூடிய ஆண்டுகளிலும் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டுமென்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை இனிவரும் நாட்களில் எடுத்தால் மட்டுமே அரசு பள்ளிகள் மூடப்படுவதிலிருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.