விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடு...குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

குமரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடு விதித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவி விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ, அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.