கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று, 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில், 8 ஆண்கள், 5 பெண்கள் என, 13 பேருக்கும், ஊத்தங்கரையில், 8 ஆண்கள், 5 பெண்கள் என, 13 பேருக்கும் தொற்று உறுதியானது. காவேரிப்பட்டணத்தில், 4 ஆண்கள், 4 பெண்கள் என, 8 பேர்; பர்கூரில், 8 வயது சிறுமி, 5 ஆண்கள் என, 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதே போல் மத்தூரில், 8 வயது சிறுவன் உள்பட, 3 ஆண்கள்; ஓசூரில், 1 ஆண், 2 பெண்கள்; வேப்பனஹள்ளியில், 2 ஆண்கள் மற்றும் பெங்களூருவை சேர்ந்த, 1 ஆண் என, 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்படி, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 2,715 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த, 57 வயது நபர் கொரோனா தொற்றால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த, 30ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதேபோல, கிருஷ்ணகிரியை சேர்ந்த, 67 வயது நபர் கடந்த, 5ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6ம் தேதி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது.