தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:- அரியலூர் - 1 செங்கல்பட்டு - 201 சென்னை - 1,456 கோவை - 22 கடலூர் - 9 தர்மபுரி - 2 திண்டுக்கல் - 22 ஈரோடு - 8 கள்ளக்குறிச்சி - 12 காஞ்சிபுரம் - 69 கன்னியாகுமரி - 20 கரூர் - 7 கிருஷ்ணகிரி - 10 மதுரை - 160 நாகை - 1 நாமக்கல் - 1 நீலகிரி - 2 பெரம்பலூர் - 2 புதுக்கோட்டை - 14 ராமநாதபுரம் - 50 ராணிப்பேட்டை - 15 சேலம் - 19 சிவகங்கை - 25 தென்காசி - 3 தஞ்சாவூர் - 16 தேனி - 32 திருப்பத்தூர் - 5 திருவள்ளூர் - 168 திருவண்ணாமலை - 32 திருவாரூர் - 1 தூத்துக்குடி - 25 திருநெல்வேலி - 11 திருப்பூர் - 5 திருச்சி - 39 வேலூர் - 28 விழுப்புரம் - 29 விருதுநகர் - 28 வெளிநாடு - 1