ரஷ்யாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் மேலும் 15,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது
14,15,316 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இன்று மேலும் 179
பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 24,366 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா
தொற்றில் இருந்து இதுவரை 10,75,904 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,15,046 பேர் மருத்துவமனை
சிகிச்சையில் உள்ளனர்.