ஸ்டாலின் வாகனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த காவலருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
உலகளவில் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். அமெரிக்காவில் உலக நாடுகளிலேயே அதிக பாதிப்பு காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகம்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துவிட்டது.
தமிழகத்தில் அமைச்சர்கள்,
எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் எதிர்க் கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாகனப்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கொரொனா தொற்று
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில்
இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை
எழுந்துள்ளது.