மதுரையில் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் வரும் 23ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: திமுக போராட்ட தேதி மாற்றம் ... நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் அறிவித்திருந்தார். நீட் தோ்வை தடைசெய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.

எனவே இதன்படி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நாளை உண்ணாவிரதம் நடக்கவுள்ள நிலையில் மதுரையில் மாற்றப்பட்டு உள்ளது. அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெறயிருந்த திமுக உண்ணாவிரதம் வருகிற 23-ம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டு உள்ளது.

பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால், ஜனநாயகத்தைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி அறிவித்து உள்ளது.