வருகிற செப்.9 ஆம் தேதி மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: தமிழகத்தில் “கலைஞர் நூற்றாண்டு” நினைவு தினத்தை ஓட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் மதுரையில் 2-வது முறையாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாம் வரும் செப். 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை EMG யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெறயிருக்கிறது.

இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்குவோர் https://forms.gle/EfbscHehvN9RS7sG6 என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும். அதே போன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் போது இலவசமாக உணவு வழங்கப்படும்.

இந்த முகாமில் கலந்து கொள்ள வருவோர் நிறுவனத்தின் முத்திரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும், மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள வேலை தேடுவோர் கட்டாயம் தன்னுடைய சுய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.