கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் உயர்ந்து இருக்கிறது ... உலக சுகாதார அமைப்பு

சீனா : கடந்த 3 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் பொது மக்களை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் கொரோனா விதிமுறைகளை மறந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

இதை அடுத்து கொரோனாவுடன் வாழ பழகி விட்டனர். கடந்த வாரம் 54 லட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலகில் எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது.

ஆனாலும் ஆசியாவில் ஒரு சில பகுதிகளில் இன்னும் இறப்பு எண்ணிக்கை சற்று உயர்வாக தான் உள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:- கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதுவரையிலும் தடுப்பூசி போடாதவர்கள் உடனே அதை போட்டுக்கொள்வது நல்லது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது நம்மை மட்டுமல்ல சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.