பொது ஊரடங்கு நீட்டிப்பு...எதில் எல்லாம் தளர்வு என்று அறிவிப்பு

நாளையும் தமிழகத்தில் பொது ஊரடங்கு முடிவடைகிறது. இதை ஒட்டி இன்று காலை தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினர்.

மாலை மருத்துவ நிபுணர்களுடன், ஆலோசனை நடந்தது. இதையடுத்து இன்று தமிழக அரசு ஊரடங்கு குறித்து வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள் நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி.

பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். புறநகர், மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு. வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கும் தடை நீட்டிக்கிறது.

மதம், அரசியல் கூட்டம், பொழுது போக்கு கூட்டங்களுக்கும் தடை நீட்டிப்பு. டீக்கடை, உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி. கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தடை நீடிக்கப்படும். ஊரக மற்றும் நகர்பகுதிகளில்உள்ள வாரச்சந்தைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதி இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.