இந்த தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

சென்னை: வருகிற மே 7-ஆம் தேதி அல்லது 8-ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிப்பு ...

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் சேலம் நாமக்கல் மற்றும் டெல்டா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின் அது தாழ்வு மண்டலமாக உருமாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். எனவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்தால் பொதுமக்கள் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து தப்பித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.