தடுப்பூசிகள் உருவாக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்

ஹைதராபாத்: உலகளாவிய் ஒத்துழைப்பு அவசியம்... வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த உலகளாவிய தடுப்பூசி ஆராய்ச்சி கூட்டு விவாதத்தில் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், திறமையான தடுப்பூசிகளின் வளர்ச்சி தொற்றுநோய்களின் தாக்கத்தைத் தணிக்க உதவும் என்று பேசினார்.