புதுச்சேரியில் முகக்கவசம் குறித்து அரசு அதிரடி உத்தரவு

புதுச்சேரி: கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்... புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு வந்த பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம்டி அணிந்திருந்தனர்.

மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பள்ளிகளில் முகக்கவசம் வழங்கப்பட்டது. தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு அறைக்கு முக கவசம் அணிந்து வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதால் மாணவ, மாணவியர் முகமூடி அணிந்து பள்ளிக்கு வந்தனர். முன்னதாக அனைத்து தேர்வு அறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.