தமிழக மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாட்டின் 77- வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

இதேபோன்று சென்னையில் உள்ள புனித ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாதாவது,

இந்திய ஒன்றியத்தின் 77-ஆவது சுதந்திர தினமான இன்று அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல மதங்கள் - இனங்கள் - மொழிகள் - கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவின் விடுதலைக்கு போராடியவர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம்.நம் சுதந்திர போராட்ட வீரர்கள் - தியாகிகள் உருவாக்க நினைத்த அனைவருக்குமான இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க இந்த நாளில் உறுதியேற்போம் என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.