ரம்ஜான் திருநாள் .. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பு

இந்தியா: சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவிப்பு ...
இதையடுத்து இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது.

இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. ஈத் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தின் செய்தியை வழங்குகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம்.

ஈத்-உல்-பித்ரின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ரமலான் வாழ்த்துகள்!” என அவர் தெரிவித்துள்ளார்.