அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு மற்றும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் 9-ம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.