விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளார் சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு நிச்சயம் செய்த ஹேம்நாத் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சித்து விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் நெடுந்தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹேம்நாத் என்பவருடன் சித்துவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதில் சித்து மற்றும் ஹேம்நாத் அவருக்கும் இடையே சமீப காலமாகவே பல
முரண்பாடுகள் ஏற்பட்டு தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது .
இந்த விஷயத்தில் அவருடன் இருந்த ஹேம்நாத் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.
இதனைத்
தொடர்ந்து, சித்ராவின் தந்தையும் நசரத்பேட்டை போலீசாரிடம் தனது மகளின்
மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை
வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் துவங்கியுள்ளனர்.