தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5849 பேர் கொரோனாவால் பாதிப்பு

5849 பேர் பாதிப்பு... தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 5,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கொத்து கொத்தாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் இதுவரையில் 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விடுபட்ட 444 மரணங்களுடன் சேர்த்து மொத்த பலியானோர் எண்ணிக்கை 3144 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4,910 பேர் குணமடைந்தனர்.

இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.