சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரிப்பு

புதுடெல்லி: சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ மற்றும் ஜிஎஸ்எல்வி ஏ ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும். சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, சிறிய ஜிஎஸ்எல்வி-கள் குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோ புதிய ராக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவு ரூ.30 கோடிக்குள் இருக்கும். அதன்படி, 2 சிறிய செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் ஆகஸ்ட் 7ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் ராக்கெட்டின் சென்சார் பழுதடைந்து செயற்கைகோள்கள் தவறான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து புதிய ராக்கெட் உருவாக்கப்பட்டு ஏவப்படும் என எஸ்எஸ்எல்வி இஸ்ரோ அறிவித்தது.