மர்மமான முறையில் 80 பசுக்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை

80 பசுக்கள் உயிரிழப்பு...ராஜஸ்தானில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 80 பசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்தில் மர்மமான முறையில் 80 பசுக்கள் நேற்று (சனிக்கிழமை) இறந்தன. தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுக்கள் மர்மான முறையில் இறந்தது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர், பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. நோய் மூலம் பசுக்கள் இறந்தனவா? அல்லது உணவுப் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.

பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.