வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய வலியுறுத்தல்

கொழும்பு: விலைகள் அதிகரிக்கப்படும் என எச்சரிக்கை... முட்டை பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாஎலயில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முட்டையொன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், 70 ரூபாவுக்கே முட்டையை கொள்வனவு செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே முட்டைக்கான தட்டுப்பாடு நீங்கும் வரையில், இந்தியா அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முட்டையினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.