எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை இரவில் பிரிட்டன் சென்றடைந்தார்.

இதையடுத்து அவரது விமானம் இரவு 10:00 மணியளவில் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது. அவர் ராணி எலிசபெத்தின் உடல் இருக்கும் சவப்பெட்டியில் மரியாதை செலுத்துவார் என புதிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.