டெல்லியில் மகள்கள் கண் முன்னே பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

உத்தர பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் தனது இரு சக்கர வாகனத்தில் இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது டெல்லி அருகே நேற்றிரவு 10.30 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிசூட்டில் அவரது தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. இதனால் விக்ரம் ஜோஷி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் விக்ரம் ஜோஷி புகார் அளித்த நான்கு நாட்களுக்குப்பிறகு அவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சுடப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த கொடூர கொலை சம்பவம் பதிவாகி