இரண்டு நாள் பிரச்சாரத்திற்காக மகளுடன் திருச்சி வந்தார் கமல்

திருச்சி வந்தார் கமல்... இரண்டு நாள் பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த கமல்ஹாசன் தனது மகளுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை துவங்கியது இதனிடையே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவக்கினார்.

இந்நிலையில் இன்றும், நாளையும் திருச்சியில் அவரது பிரச்சாரம் துவங்க உள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.

அங்கு கமலஹாசனுக்கு மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து பிரச்சார வேனில் புறப்பட்ட கமலஹாசன் விமான நிலையம், வயர்லெஸ் ரோடு, கே.கே.நகர், சிம்கோ மீட்டர், மன்னார்புரம் நால்ரோடு, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக காஜாமலை எஸ்ஆர்எம் ஹோட்டல் சென்று அடைந்தார்.

பேசுவார் என மக்கள் காத்திருந்த நிலையில் எங்கும் பேசவில்லை மக்களை பார்த்து கைகூப்பியும், வணங்கியும் கையசைத்தும் சென்றார். கமலுடன் 2வது மகள் அக்சராவும் உன் வந்திருந்தார்.