ஐஎப்எஸ் நிறுவன மோசடி வழக்கில் முக்கிய தரகர் கைது

சென்னை: முக்கிய தரகர் கைது... அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் பேரிடமிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த விவகாரத்தில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஹரிகரன் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தரகராக செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூலித்து, ஹரிகரன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்ற அமலாக்கத்துறையினர், முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, அவரை கைது செய்தனர்.

மோசடி வழக்கில் இதுவரை 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.